search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்பர் பிளேட்"

    • தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது
    • சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் சுமார் 100 இடங்களில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனை நடத்தினர்

    சென்னை:

    சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ் என பல்வேறு துறைகளை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு போலீசாரிடம் இருந்து எளிதாக தப்பி விடுகிறார்கள்.

    எனவே தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பவர்கள் மே 1-ந்தேதிக்குள் அதை அகற்ற வேண்டும். அப்படி அகற்றாமல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது இன்று முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்று எச்சரித்தார்.

    அதன் அடிப்படையில் சென்னையில் விதிகளை மீறி வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக போலீசார் இன்று முதல் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். இதற்காக சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் சுமார் 100 இடங்களில் இந்த அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது.

    இன்று முதல் முறையாக விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர். முதல் முறை வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னரும் 2-வது முறையாக விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினார்கள்.

    இந்நிலையில், வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு செய்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. இதில் 121 போலீஸ் வாகனங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது.
    • சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் சுமார் 100 இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாகனங்களில் சமீப காலமாக பத்திரிகை, ஊடகம், போலீஸ், வழக்கறிஞர், மருத்துவர், மாநகராட்சி, உயர்நீதிமன்றம், தலைமை செயலகம், மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவது அதிகரித்து வருகிறது.

    மேலும் இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்தபோது, பலர் தங்கள் வாகனங்களில் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர்களுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதும், போலியாக ஸ்டிக்கர்களை ஒட்டி இருப்பதும் தெரியவந்தது.

    குறிப்பாக குற்றச்செயல்களில் ஈடுபடும் சிலர் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போலீசாரின் கவனத்தை திசை திருப்பி தப்பி முறைகேடுகளில் ஈடுபடுவதும் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பலர் வாகன நம்பர் பிளேட்டுகளில் பெரிதாக ஸ்டிக்கர் ஒட்டி, வாகன பதிவு எண்களை மிகவும் சிறியதாக எழுதியுள்ளனர். இதனால் சாலைகளில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை முக்கிய சாலை சந்திப்புகளில் ஏஎன்பிஆர் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் துல்லியமாக கண்டறிந்து வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை.

    சென்னையில் 16 சந்திப்புகளில் 76 ஏஎன்பிஆர் கேமராக்கள் உள்ளன. அவைகளில் சிறிதாக எழுதப்பட்ட பதிவு எண் சிக்குவதில்லை.

    எனவே இதுபோல போலியாக ஸ்டிக்கர் ஒட்டுபவர்களை கண்டுபிடிக்கவும், வாகன பதிவு எண்களை சிறிதாக எழுதுவதை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுதாகர் கடந்த 27-ந்தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்.

    அதில், 'சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ் என பல்வேறு துறைகளை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு போலீசாரிடம் இருந்து எளிதாக தப்பி விடுகிறார்கள்.

    எனவே தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பவர்கள் மே 1-ந்தேதிக்குள் அதை அகற்றிக்கொள்ளலாம். அப்படி அகற்றாமல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது இன்று முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்று எச்சரித்தார்.

    இந்த நிலையில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் தங்களின் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள போக்குவரத்து போலீசார் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அதுபோன்றவர்கள் தங்கள் வாகனங்களில் தங்களின் துறைகளை குறிப்பிட்டு ஸ்டிக்கர் ஒட்டிகொள்ள போக்குவரத்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதே நேரத்தில் அந்த துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஊடகம், வக்கீல், மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை பாயும் என்றும் போலீசார் எச்சரித்து இருந்தனர்.

    அதே போன்று வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது என்றும் போக்குவரத்து போலீசார் விளக்கம் அளித்துஉள்ளனர்.

    அதன் அடிப்படையில் சென்னையில் விதிகளை மீறி வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக போலீசார் இன்று முதல் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். இதற்காக சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் சுமார் 100 இடங்களில் இந்த அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது.

    இன்று காலையில் இருந்தே போலீசார் கடுமையான வாகன சோதனை நடத்தி விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் விதிமுறைகளை மீறி போலியாக ஸ்டிக்கர் ஒட்டி இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். இன்று முதல் முறையாக விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர். முதல் முறை வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னரும் 2-வது முறையாக விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினார்கள்.

    வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள், வாகன பதிவு எண்ணை குறிப்பிட்ட அளவை விட சிறியதாக எழுதியவர்கள், சம்பந்தப்பட்ட துறை சாராதவர்கள் தங்கள் வாகனங்களில் பத்திரிகை, ஊடகம், போலீஸ், வக்கீல், மருத்துவர் என போலியாக ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் ஆகியோர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தனர். இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • விதிமுறைகளின் படி அனைவருக்கும் பொது வான வகையில் நம்பர் பிளேட்டுகள் இருக்க வேண்டும்.
    • விபத்துக்கள் ஏற்படுத்திவிட்டு தப்புவதை வாகனங்களின் எண்களைக் கொண்டு போலீசாரும், பொது மக்களும் அடையாளம் காண்கின்றனர்.

    ராமநாதபுரம்

    மக்கள் தொகை அதிகரிப்பால் வாகனங்கள் பயன்படுத்துபவர்களும் அதிகரித்து வருகின்றனர். வாகன நெருக்கடி அதிகரித் தாலும் சாலைகளின் அளவு அதிகரிக்க முடியாத நிலை யில் அடிக்கடி விபத்துகளும், இதன் மூலம் பல்வேறு குற்ற செயல்களும் நடைபெறு கிறது.

    இது போன்ற குற்றச்சம்ப வங்கள் விபத்துக்கள் ஏற் படுத்திவிட்டு தப்புவதை வாகனங்களின் எண்களைக் கொண்டு போலீசாரும், பொது மக்களும் அடையா ளம் காண்கின்றனர்.

    வாகன எண்களை நம்பர் பிளேட்டுகளில் எழுதுவ தற்கு ஒவ்வொரு எண் ணிற்கும் இடைவெளி, உய ரம், நிறம் என்ற விதிமுறை கள் உள்ள நிலையில் பல் வேறு தரப்பினரும் தங்கள் இஷ்டமான வடிவங்களில் வாகன பதிவு எண்களை எழுதி வலம் வருகின்றனர்.

    ஹெல்மெட், லைசென்ஸ் போன்ற கண்காணிப்புகளில் காட்டும் ஈடுபாட்டை போலீ சார் முறையற்ற நம்பர் பிளேட்டுகளில் காட்டாத தால் அதிகாரத்தை பொறுத்து கட்சி வண்ணங் களில், மிரட்டல் எழுத்துக் கள் வருவது போன்றும், தங் கள் பதவியையும், வாகன எண்களுக்கு பதில் அரசியல், ஜாதி கட்சி தலைவர்களின் உருவங்களை பொறித்தும், ஆங்கில எழுத்துக்களுக்கு பதில் தமிழில் மாற்றியும் வைத்துள்ளனர். இது போன்ற செயல்களால் முக்கியமான நேரங்களில் நழுவி செல்லும் வாகனங் களை அடையாளம் காண முடிவதில்லை.

    எனவே விதிமுறைகளின் படி அனைவருக்கும் பொது வான வகையில் நம்பர் பிளேட்டுகளில் எண்களை எழுத வாகன உரிமையாளர் களுக்கும், இவற்றை எழுதும் ஸ்டிக்கர் கடைகளுக்கும் அறிவுறுத்துவதுடன் மீறு பவர்களுக்கு அபராதம் விதித்து கண்காணிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.

    • துபாயில் பி 7 பதிவு எண் கொண்ட காரின் நம்பர் பிளேட் ரூ.122 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
    • இது உலகின் விலை உயர்ந்த நம்பர் பிளேட் என்ற கின்னஸ் சாதனை படைத்தது.

    துபாய்:

    தற்போது ரம்ஜான் காலம் என்பதால் துபாய் அரசு உலக பட்டினியைப் போக்க முடிவு செய்தது. அதற்காக 100 கோடி உணவுகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    அதில் ஒன்று, அந்நாட்டில் உள்ள கார்களுக்கு பேன்சியான நம்பர் பிளேட்களை ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நம்பர் பிளேட்களை ஏலம் விடும் பொறுப்பு எமிரேட்ஸ் ஆக்ஷன் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஏலத்தை நடத்தினர்.

    இந்த ஏலத்தில் ஏகப்பட்ட நம்பர் பிளேட்கள் இடம்பெற்றன. 10 இரட்டை இலக்க நம்பர்களான ஏஏ 19, ஏஏ 22, ஏஏ 80, ஓ 71, எக்ஸ் 36, டபிஎல்யூ 78, எச் 31, இசட் 37, ஜே 57 மற்றும் என் 41 ஆகிய நம்பர் பிளேட்டும், மற்ற ஸ்பெஷல் நம்பர் பிளேட்களான ஒய் 900, கியூ 22222 ஆகிய நம்பர்களும் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டது.

    இந்த ஏலத்தில் ஏஏ19 என்ற நம்பர் பிளேட் 4.9 மில்லியன் திராம்ஸ் (இந்திய மதிப்பில் ரூ10.92 கோடி)க்கு ஏலம் போனது. அடுத்ததாக ஓ 71 என்ற நம்பர் பிளேட் 2.150 மில்லியன் திராம்ஸ், அதாவது ரூ4.79 கோடிக்கு ஏலம் போனது. கியூ 22222 என்ற நம்பர் பிளேட் 975,000 திராம்ஸ், அதாவது ரூ 2.17 கோடிக்கு ஏலம் போனது.

    உலகிலேயே இதுவரை அதிக விலையில் ஏலம் போனது கடந்த 2008-ம் ஆண்டு ஏலம் போன 1ம் நம்பர் பிளேட் தான். அந்த நம்பர் பிளேட் 52.2 மில்லியன் திராம்ஸ், அதாவது ரூ116.3 கோடி என்ற விலையில் ஏலம் போனது.

    இந்நிலையில், இந்த ஏலத்தில் பி 7 என்ற நம்பர் பிளேட் 55 மில்லியன் திராம்ஸ் என்ற விலையில் ஏலம் போயுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ122.6 கோடிக்கு இந்த ஏலம் போயுள்ளது. இதுதான் தற்போது உலகிலேயே அதிக விலைக்கு ஏலம்போன நம்பர் பிளேட் என்ற கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது.

    இந்த ஏலம் மூலம் வசூலான பணம் முழுவதும் அந்நாட்டின் 100 கோடி உணவு நன்கொடை திட்டத்திற்காக வழங்கப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • எச்.பி.-99-9999 என்ற எண்ணை கேட்டு 26 பேர் ஏலத்தில் பங்கேற்றனர்.
    • இரு சக்கர வாகன பதிவு எண்ணுக்கு இதுவரை வழங்கப்பட்டதில் மிகப்பெரிய தொகை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் குறிப்பிட்ட பேன்சி நம்பர்களை வாங்குவதற்காக சிலர் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கின்றனர்.

    அதில் சிலர் தங்களது வாகனங்களுக்கு ஜோசியர்கள் பரிந்துரைக்கும் அதிர்ஷ்ட எண், தங்களது பிறந்த நாள், வருடம் கொண்ட எண் என விதவிதமான எண்களை கேட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும்போது, குறிப்பிட்ட எண்ணுக்காக கடும் போட்டி ஏற்படுகிறது.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த எண்ணை ஏலத்தில் விடுகிறார்கள். அது போன்று இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தான் 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய ஸ்கூட்டிக்கு பேன்சி நம்பர் பெறுவதற்காக ரூ.1 கோடி செலவு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தான் வாங்கிய ஸ்கூட்டிக்காக எச்.பி.-99-9999 என்ற பேன்சி பதிவு எண்ணை பெறுவதற்காக போக்குவரத்து ஆணையம் நடத்திய ஆன்-லைன் ஏலத்தில் கலந்து கொண்டார். அப்போது எச்.பி.-99-9999 என்ற எண்ணை கேட்டு 26 பேர் ஏலத்தில் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து அந்த எண்ணுக்கு ஆரம்ப கட்டமாக ரூ.1,000 ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொருவரும் ஏலத் தொகையை உயர்த்தி கொண்டே சென்ற நிலையில், அதில் ஒருவர் அந்த எண்ணை ரூ.1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பெற்றார்.

    இரு சக்கர வாகன பதிவு எண்ணுக்கு இதுவரை வழங்கப்பட்டதில் மிகப்பெரிய தொகை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணை பெறுவதற்காக ரூ.1.12 கோடி செலவழித்த நபர் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

    • விதிமுறை மீறி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் மடக்கி பிடித்தனர்.
    • இனிவரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ஆலந்தூர்:

    மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் பெரும்பாலானோர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பதிவு எண்ணை பொருத்தி உள்ளனர்.

    பார்ப்பதற்கு எளிதில் தெரியாத அளவிற்கு மாடலாகவும், கலர்கலராகவும் வைத்து இருக்கிறார்கள். விதிமுறைப்படி வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் பொருத்த வேண்டும் என்று போலீசார் எச்சரித்தும் பலர் கண்டு கொள்வதில்லை.

    இந்நிலையில் மடிப்பாக்கம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தில்லை கங்கா நகர் மெயின் ரோடு, ஆதம்பாக்கம் ஏரி பாலம் அருகே இன்று காலை மடிப்பாக்கம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது விதிமுறை மீறி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் மடக்கி பிடித்தனர். வாகனங்களில் இருந்த விதவிதமான நம்பர் பிளேட்டுகளை அதிரடியாக அகற்றினர். மேலும் அங்கேயே அந்த மோட்டார் சைக்கிள்களுக்கு விதிமுறைபடி உள்ள புதிய நம்பர் பிளேட் மாற்றப்பட்டது.

    சுமார் 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இதில் சிக்கியது. கார்களும் தப்பவில்லை. விதிமுறை மீறி நம்பர் பிளேட் உள்ள வாகனங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கவில்லை.

    வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர். இனிவரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இன்று காலை நடந்த இந்த அதிரடி சோதனையில் 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். சிக்கிய வாகனங்கள் சாலை யோரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    புளியந்தோப்பு போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முறையான நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அறிவுரை வழங்கினர். மேலும் வாகன ஓட்டிகள் விரும்பினால் உடனடியாக நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பி வைத்தனர்.

    இந்த வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் செல்லதுரை, சப்-இன்ஸ்பெக்டர் முனிவேல், ரேகா, சையத் அமின், தலைமை காவலர்கள் பாஸ்கர், சுரேஷ்பாபு, பிரேம்நாதன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    ×